வெள்ளி, 10 அக்டோபர், 2014

கவிப்படைப்புகள்: விழியதிகாரம் -

கவிப்படைப்புகள்: விழியதிகாரம் -: இருவிழி பார்வையில் எத்தனை எத்தனை கவிதைகள்..!! அடடா..!- அவள் முகத்தாளில் துடிக்கும் அழகு முட்டைமுழி விழியழகில் தினம் தினம் செத்துவிடத...

விழியதிகாரம் - 6




வர்ணனை - விழியாளின் இதழ்களோடு என் கனாக்கள்
-----------------------------------------------------------------------

அவளின் செவ்விதழில்
வெட்க வரிகள்.-!
கொழத்த உதட்டில்
கொழுந்து எரிகின்றது-
பேராசை உணர்வுகள்.

விழியழகியின்
காதல்மொழி இதழ்கள்
சிந்தும் சொற்களை
பொறுக்கி கோர்த்து
எழுதி எழுதியே
நான் கவிஞன்
என்றாகிவிட்டேன்.

மேலுதட்டிற்கும்
கீழுதட்டிற்கும்
இடையில் முத்தமெழுதி
உறசாகவிருது
பெற்றிடுவேண்டுமே
என் கவி இதழ்கள்..!

உதட்டுக்களத்தில்
முத்தப்பரிசு..!
ஒன்று இருக்கிறதாம்.

அழைப்பாளா..!?
இதழும் இதழும்
சண்டையிட அழைப்பாளா ?

அழைக்கவே மாட்டாள்..?

காதல் சூறாவளியில்
காம நெருப்பு மூண்டாலும்
எப்போதும் காதலிகள் எவளும்
முத்தயுத்தத்திற்கு
சத்தமிட்டு அழைப்பதில்லை.

ஆனாலும் அழைப்பார்கள்.
அவர்களின்
விழியில் அலைப்பாயும்
முழியிலிருக்கும்
வரவேற்பு தொனி...!
---
எனக்குள் வெறியேறிய
ஹார்மோன் ராஜாக்கள்
போரிட துணிந்தால்
பேரழகியின் செவ்விதழ்
கதி என்னாகும்.?
அறியாத விழிநாயகி
என் மீது
மோகத்தை மூட்டி
காமத்தை கூட்டி- என்
இதழ் குறும்பனை
முத்தப்போருக்கு விழியால்
கொஞ்சல்தொனியோடு
வெட்கப்பட்டு இஷ்டப்பட்டு
அழைக்கிறாள்.

யுத்தமொன்று நடந்தால்
ரத்தமென்று பார்க்காமல்
பின்வாங்குவது சரியோ?
கவிவீரனுக்கு அழகோ?

விதிமீறினால் போர்க்குற்றம்..!
விதிமீறாவிட்டால் காதல்குற்றம்..!

அய்யகோ...!
கமலஹாசா... என்ன கொடுமையிது..?

சரி சரி
நான் என்ன
இனப்படுக்கொலையா செய்திடுவேன்
இதழ்சுவைக்கதானே விரைகிறேன்.



(விழியதிகாரம்- தொடரும் )

விழியதிகாரம் - 5




வர்ணனை-1 -விழியாளின் கூந்தல்.
-----------------------------------------------------------------


இதுவரையில் எந்த மங்கையிடமும்
இப்படியொரு காட்சி கண்டதில்லை -கொஞ்சிடும்
விழியாளின் பின்னந்தலையில்
கொட்டுகிறது கருங்கூந்தல் அருவி..!- வர்ணித்திட
தமிழ்மொழியாற்றலும் எந்தன்மூளையில்
வரமறுக்கிறது என்செய்வேன் என் தோழி..!

என் விரல்கள் கயல்களாகட்டும்
கயல்கள் அவள் கூந்தலருவியில்
துள்ளி துள்ளி விளையாடட்டும்..!
என் இதழ்கள் பூவாகட்டும்
பூக்ககள் அவள் கூந்தல்வீனையில்
பட்டுப்பட்டு இசைந்தாடட்டும்.


அய்யோ கம்பனே...!
என்கவிக்கு உதவிப்புரியாமல்
எங்கு சென்று தொலைந்தாய்..?
தேர்வறையில் விடையறியா மாணவனாய்
விழிப்பிதுங்கி கற்பனைவறட்சியில் தவிக்கிறேனே..!.

அடப்போயா..!
நானும் உன்னைவிட கொம்பனே..!

ஆஹா...! ஆஹா....!
அதோ....! அதோ...!
காற்றில் அசைந்தாடும்
அவள் கூந்தலிறக்கைகள்..!


ஆழிஅலைகளாய் காற்றுவெளியில்
மெட்டுப்போட்டு நடனமாடுகிறதே..! -நான்
மொழித்தோணியிலேறி ரசனைஜதியில்
தொட்டுத்தொட்டு கவி எழுதவா ?..

என்ன செய்வேன் என்ன செய்வேன்.
உவமை குரலின்றி என் கவிதை
ஊமையாகி தவிக்கிறதே...! !

(விழியதிகாரம்- வர்ணணை... தொடரும் )


-இரா. சந்தோஷ் குமார்

விழியதிகாரம் - 4



விழியதிகாரியை வர்ணிக்கும் முன்...!
------------------------------------------

விழி ஈர்ப்பில்
மையல்கொண்ட
இந்த நாயகனின்
புயல் குணங்கொண்ட
பேராசைகள் யாவும்
அவள் விழியை மீறி
உடல் அங்கங்களில்
தடையில்லாமலே பயணிக்கும்

பயணித்தால் தான்
அது இயல்பு
உலக வியாக்கியனங்களுக்கு
பணிந்தால் அடங்கினால்
அது மனித வாழ்வில்
போலித்தனமான கணக்கு..!

இங்கே...இனிமேல்
என் விழியதிகார கவியின்
வார்த்தை பஞ்சங்களுக்கு
வைரமுத்துவையும் வாலியையும்
திருடப்போகிறேன்.
காமத்தை சொல்ல
அவர்களுக்கு உதவிப்புரிந்தது
கலிங்கத்துப்பரணி..!
எனக்கு உதவிப்புரிவது
என் கன்னியின் மேனி..!


கம்பனையும் நான்
வம்புக்கு இழுப்பேன்
பாரதியையும் நான்
கொஞ்ச்ம் சீண்டுவேன்.
ஆனாலும்
இவர்களை
மிஞ்சிட மிரட்டிட
என் விழியதிகார நாயகியை
நான் வர்ணித்திட வேண்டும்.


இதோ..!
அவளை வர்ணிக்க
காமப் பேனாவில்
காதல் மை ஊற்றிவிட்டேன்..!
அவள் மீதான மோகத்தில்
என் சிந்தனையை
முத்தமிடுகிறது என் கற்பனைகள்..!


(விழியதிகாரம் - தொடரும்)


-இரா.சந்தோஷ் குமார்

விழியதிகாரம் -3


--------------------------------
முதல் சந்திப்பு


-----------------------------
நதிக்கரையோரம்
அழகிய புல்வெளித்தளம்
ஒரு புல் மீது
துயில் கொள்ளும்
புது ரக பனித்துளி...!

நானும் கவிஞனே!
இலக்கியசெறுக்கில்
வைரமுத்துவின் வேஷத்தில்
வெள்ளை உடையணிந்து
அவனின் நடையளந்து
வராத வார்த்தைகளை
தட்டி கொட்டி
கேட்டிருந்தேன்
எனது மேலவை
உறுப்பினர் மூளையிடம்..!

வருகிறது வருகிறது
வந்தே விட்டது
எனக்கான கவிதை

இதோ வருகிறாள்.!
என் விழியதிகார நாயகி!

எனக்கான வானம்
சந்தோஷ மழை பெய்திட
எனக்கான மேகம்
ஆனந்த இடி முழங்கிட

முல்லைப்பூ வடிவத்திலான
வாசமுள்ள வசந்தமழை
குறும்புத்தனமாய் பெய்திட

வந்தாள்.. வந்தாள்
வந்தேவிட்டாள்..
என் அருகில்..!

“ ஹாய் ஹவ் ஆர் யூ“
ஆ..... !!!
தமிழச்சியிடம்
ஆங்கில நெடி...!

கட்டழகி பேரழகி -அவள்
விழியுருட்டி மனமுருகி
கைநீட்டி நலம் விசாரித்திட...!
உனக்கு தேவையா
இங்கு தமிழ்ப்பற்று..?

இதயத்திலிருந்து
ஓர் எச்சரிக்கை நச்சரிப்பு..!

முதல் முறையாய்
என் விழியில்
ஏறியது ஒரு காந்தசக்தி..!
பதறிய கையில் தைரியமூட்டி
நீட்டினேன்...................!
பற்றினாள்...........................!

பற்றிக்கொண்டது எங்கள் உறவு..!
இரு ஐ விரல்கள்
சங்கமித்தால்
இச்சைக்கொண்ட
இரு பாம்புகளின்
ஆனந்த நடனம்தானே....!

பிரியப்பட்டு பிடித்துகொண்ட
விரல்கள்
பின்னிப்பிணைய
என் விழியில்
ஈர்க்கப்பட்டிருக்கும்
அவளின்
கருவிழிகள்..!

உற்று நோக்கினேன்
அவளின் இருவிழிகளை..!
சற்றும் மிரளாமல் என்னை
சளைக்காமல் மிரட்டியது
அவளின் வேல்விழிகள்
புது காதல் மொழியில்..!
--------------------------------------------


என் கவியோடு
இவ்விழியதிகார நாயகி
தொடர்வாளா ?
இல்லை
தொலைந்துவிடுவளா?



(விழியதிகாரம்- தொடரும்)


-இரா.சந்தோஷ் குமார்

விழியதிகாரம் -2



யார் அவள்- ?
------------------------------------------

அவள் ஒரு திமிர்ப்பிடித்தவள்
அந்த திமிரில்
-- என் மீதான ராட்சஸத
அன்பு இருக்கிறது
--- என் மீதான அகோர
பாசம் இருக்கிறது
-- என் மீதான வன்முறை
ஆசை இருக்கிறது.

அவள் திமிர்ப்பிடித்தவள்
அன்பு பாசம் ஆசை
ஏதும் அறியா
ஜடமாய் திரிவதாய்
பொய்யுரைப்பாள்.

பொய்யுரைத்தவளின்
விழி சொல்லும்
என் மீதான அவளின்
காதல்மொழியை..!

ஆனாலும்
நான் அவளுக்கு
காதலன் என்றாகவேமாட்டேன்
அவள் எனக்கு
எக்காலத்திற்கும்
காதலி என்றாகவேமாட்டாள்

என்றாலும்
நாங்கள் காதலர்கள்..!
காதலர்களை போன்றவர்கள்..!

ஆம் .!
காதலர்கள் என்ற சொல்லுக்கு
மாற்று சொல்லற்று
விக்கி திக்கி தவிக்கிறோம்.

இந்த
விக்கல் தவிப்பில்கூட
அவள் விழிக்குதிரையில்
என் இதழ்மன்மதன்
ஆடும் முத்தநாட்டியத்தில்
ரசித்தப்படியே
அடங்கியே விடும்.


-----------------------------------------------------
விழியதிகார நாயகி..!

என் கற்பனையில்
எழுதப்படுபவளா?
இல்லை
என் கற்பனைக்கு
வசப்பட்டவளா ?

முடிவுரையில்
தெளிவுரை பிறக்கும்..!
பிறக்கலாம்.
அல்லது
மரணிக்கலாம்.


(விழியதிகாரம்- தொடரும்.)


-இரா.சந்தோஷ் குமார்