வெள்ளி, 10 அக்டோபர், 2014

கவிப்படைப்புகள்: விழியதிகாரம் -

கவிப்படைப்புகள்: விழியதிகாரம் -: இருவிழி பார்வையில் எத்தனை எத்தனை கவிதைகள்..!! அடடா..!- அவள் முகத்தாளில் துடிக்கும் அழகு முட்டைமுழி விழியழகில் தினம் தினம் செத்துவிடத...

விழியதிகாரம் - 6




வர்ணனை - விழியாளின் இதழ்களோடு என் கனாக்கள்
-----------------------------------------------------------------------

அவளின் செவ்விதழில்
வெட்க வரிகள்.-!
கொழத்த உதட்டில்
கொழுந்து எரிகின்றது-
பேராசை உணர்வுகள்.

விழியழகியின்
காதல்மொழி இதழ்கள்
சிந்தும் சொற்களை
பொறுக்கி கோர்த்து
எழுதி எழுதியே
நான் கவிஞன்
என்றாகிவிட்டேன்.

மேலுதட்டிற்கும்
கீழுதட்டிற்கும்
இடையில் முத்தமெழுதி
உறசாகவிருது
பெற்றிடுவேண்டுமே
என் கவி இதழ்கள்..!

உதட்டுக்களத்தில்
முத்தப்பரிசு..!
ஒன்று இருக்கிறதாம்.

அழைப்பாளா..!?
இதழும் இதழும்
சண்டையிட அழைப்பாளா ?

அழைக்கவே மாட்டாள்..?

காதல் சூறாவளியில்
காம நெருப்பு மூண்டாலும்
எப்போதும் காதலிகள் எவளும்
முத்தயுத்தத்திற்கு
சத்தமிட்டு அழைப்பதில்லை.

ஆனாலும் அழைப்பார்கள்.
அவர்களின்
விழியில் அலைப்பாயும்
முழியிலிருக்கும்
வரவேற்பு தொனி...!
---
எனக்குள் வெறியேறிய
ஹார்மோன் ராஜாக்கள்
போரிட துணிந்தால்
பேரழகியின் செவ்விதழ்
கதி என்னாகும்.?
அறியாத விழிநாயகி
என் மீது
மோகத்தை மூட்டி
காமத்தை கூட்டி- என்
இதழ் குறும்பனை
முத்தப்போருக்கு விழியால்
கொஞ்சல்தொனியோடு
வெட்கப்பட்டு இஷ்டப்பட்டு
அழைக்கிறாள்.

யுத்தமொன்று நடந்தால்
ரத்தமென்று பார்க்காமல்
பின்வாங்குவது சரியோ?
கவிவீரனுக்கு அழகோ?

விதிமீறினால் போர்க்குற்றம்..!
விதிமீறாவிட்டால் காதல்குற்றம்..!

அய்யகோ...!
கமலஹாசா... என்ன கொடுமையிது..?

சரி சரி
நான் என்ன
இனப்படுக்கொலையா செய்திடுவேன்
இதழ்சுவைக்கதானே விரைகிறேன்.



(விழியதிகாரம்- தொடரும் )

விழியதிகாரம் - 5




வர்ணனை-1 -விழியாளின் கூந்தல்.
-----------------------------------------------------------------


இதுவரையில் எந்த மங்கையிடமும்
இப்படியொரு காட்சி கண்டதில்லை -கொஞ்சிடும்
விழியாளின் பின்னந்தலையில்
கொட்டுகிறது கருங்கூந்தல் அருவி..!- வர்ணித்திட
தமிழ்மொழியாற்றலும் எந்தன்மூளையில்
வரமறுக்கிறது என்செய்வேன் என் தோழி..!

என் விரல்கள் கயல்களாகட்டும்
கயல்கள் அவள் கூந்தலருவியில்
துள்ளி துள்ளி விளையாடட்டும்..!
என் இதழ்கள் பூவாகட்டும்
பூக்ககள் அவள் கூந்தல்வீனையில்
பட்டுப்பட்டு இசைந்தாடட்டும்.


அய்யோ கம்பனே...!
என்கவிக்கு உதவிப்புரியாமல்
எங்கு சென்று தொலைந்தாய்..?
தேர்வறையில் விடையறியா மாணவனாய்
விழிப்பிதுங்கி கற்பனைவறட்சியில் தவிக்கிறேனே..!.

அடப்போயா..!
நானும் உன்னைவிட கொம்பனே..!

ஆஹா...! ஆஹா....!
அதோ....! அதோ...!
காற்றில் அசைந்தாடும்
அவள் கூந்தலிறக்கைகள்..!


ஆழிஅலைகளாய் காற்றுவெளியில்
மெட்டுப்போட்டு நடனமாடுகிறதே..! -நான்
மொழித்தோணியிலேறி ரசனைஜதியில்
தொட்டுத்தொட்டு கவி எழுதவா ?..

என்ன செய்வேன் என்ன செய்வேன்.
உவமை குரலின்றி என் கவிதை
ஊமையாகி தவிக்கிறதே...! !

(விழியதிகாரம்- வர்ணணை... தொடரும் )


-இரா. சந்தோஷ் குமார்

விழியதிகாரம் - 4



விழியதிகாரியை வர்ணிக்கும் முன்...!
------------------------------------------

விழி ஈர்ப்பில்
மையல்கொண்ட
இந்த நாயகனின்
புயல் குணங்கொண்ட
பேராசைகள் யாவும்
அவள் விழியை மீறி
உடல் அங்கங்களில்
தடையில்லாமலே பயணிக்கும்

பயணித்தால் தான்
அது இயல்பு
உலக வியாக்கியனங்களுக்கு
பணிந்தால் அடங்கினால்
அது மனித வாழ்வில்
போலித்தனமான கணக்கு..!

இங்கே...இனிமேல்
என் விழியதிகார கவியின்
வார்த்தை பஞ்சங்களுக்கு
வைரமுத்துவையும் வாலியையும்
திருடப்போகிறேன்.
காமத்தை சொல்ல
அவர்களுக்கு உதவிப்புரிந்தது
கலிங்கத்துப்பரணி..!
எனக்கு உதவிப்புரிவது
என் கன்னியின் மேனி..!


கம்பனையும் நான்
வம்புக்கு இழுப்பேன்
பாரதியையும் நான்
கொஞ்ச்ம் சீண்டுவேன்.
ஆனாலும்
இவர்களை
மிஞ்சிட மிரட்டிட
என் விழியதிகார நாயகியை
நான் வர்ணித்திட வேண்டும்.


இதோ..!
அவளை வர்ணிக்க
காமப் பேனாவில்
காதல் மை ஊற்றிவிட்டேன்..!
அவள் மீதான மோகத்தில்
என் சிந்தனையை
முத்தமிடுகிறது என் கற்பனைகள்..!


(விழியதிகாரம் - தொடரும்)


-இரா.சந்தோஷ் குமார்

விழியதிகாரம் -3


--------------------------------
முதல் சந்திப்பு


-----------------------------
நதிக்கரையோரம்
அழகிய புல்வெளித்தளம்
ஒரு புல் மீது
துயில் கொள்ளும்
புது ரக பனித்துளி...!

நானும் கவிஞனே!
இலக்கியசெறுக்கில்
வைரமுத்துவின் வேஷத்தில்
வெள்ளை உடையணிந்து
அவனின் நடையளந்து
வராத வார்த்தைகளை
தட்டி கொட்டி
கேட்டிருந்தேன்
எனது மேலவை
உறுப்பினர் மூளையிடம்..!

வருகிறது வருகிறது
வந்தே விட்டது
எனக்கான கவிதை

இதோ வருகிறாள்.!
என் விழியதிகார நாயகி!

எனக்கான வானம்
சந்தோஷ மழை பெய்திட
எனக்கான மேகம்
ஆனந்த இடி முழங்கிட

முல்லைப்பூ வடிவத்திலான
வாசமுள்ள வசந்தமழை
குறும்புத்தனமாய் பெய்திட

வந்தாள்.. வந்தாள்
வந்தேவிட்டாள்..
என் அருகில்..!

“ ஹாய் ஹவ் ஆர் யூ“
ஆ..... !!!
தமிழச்சியிடம்
ஆங்கில நெடி...!

கட்டழகி பேரழகி -அவள்
விழியுருட்டி மனமுருகி
கைநீட்டி நலம் விசாரித்திட...!
உனக்கு தேவையா
இங்கு தமிழ்ப்பற்று..?

இதயத்திலிருந்து
ஓர் எச்சரிக்கை நச்சரிப்பு..!

முதல் முறையாய்
என் விழியில்
ஏறியது ஒரு காந்தசக்தி..!
பதறிய கையில் தைரியமூட்டி
நீட்டினேன்...................!
பற்றினாள்...........................!

பற்றிக்கொண்டது எங்கள் உறவு..!
இரு ஐ விரல்கள்
சங்கமித்தால்
இச்சைக்கொண்ட
இரு பாம்புகளின்
ஆனந்த நடனம்தானே....!

பிரியப்பட்டு பிடித்துகொண்ட
விரல்கள்
பின்னிப்பிணைய
என் விழியில்
ஈர்க்கப்பட்டிருக்கும்
அவளின்
கருவிழிகள்..!

உற்று நோக்கினேன்
அவளின் இருவிழிகளை..!
சற்றும் மிரளாமல் என்னை
சளைக்காமல் மிரட்டியது
அவளின் வேல்விழிகள்
புது காதல் மொழியில்..!
--------------------------------------------


என் கவியோடு
இவ்விழியதிகார நாயகி
தொடர்வாளா ?
இல்லை
தொலைந்துவிடுவளா?



(விழியதிகாரம்- தொடரும்)


-இரா.சந்தோஷ் குமார்

விழியதிகாரம் -2



யார் அவள்- ?
------------------------------------------

அவள் ஒரு திமிர்ப்பிடித்தவள்
அந்த திமிரில்
-- என் மீதான ராட்சஸத
அன்பு இருக்கிறது
--- என் மீதான அகோர
பாசம் இருக்கிறது
-- என் மீதான வன்முறை
ஆசை இருக்கிறது.

அவள் திமிர்ப்பிடித்தவள்
அன்பு பாசம் ஆசை
ஏதும் அறியா
ஜடமாய் திரிவதாய்
பொய்யுரைப்பாள்.

பொய்யுரைத்தவளின்
விழி சொல்லும்
என் மீதான அவளின்
காதல்மொழியை..!

ஆனாலும்
நான் அவளுக்கு
காதலன் என்றாகவேமாட்டேன்
அவள் எனக்கு
எக்காலத்திற்கும்
காதலி என்றாகவேமாட்டாள்

என்றாலும்
நாங்கள் காதலர்கள்..!
காதலர்களை போன்றவர்கள்..!

ஆம் .!
காதலர்கள் என்ற சொல்லுக்கு
மாற்று சொல்லற்று
விக்கி திக்கி தவிக்கிறோம்.

இந்த
விக்கல் தவிப்பில்கூட
அவள் விழிக்குதிரையில்
என் இதழ்மன்மதன்
ஆடும் முத்தநாட்டியத்தில்
ரசித்தப்படியே
அடங்கியே விடும்.


-----------------------------------------------------
விழியதிகார நாயகி..!

என் கற்பனையில்
எழுதப்படுபவளா?
இல்லை
என் கற்பனைக்கு
வசப்பட்டவளா ?

முடிவுரையில்
தெளிவுரை பிறக்கும்..!
பிறக்கலாம்.
அல்லது
மரணிக்கலாம்.


(விழியதிகாரம்- தொடரும்.)


-இரா.சந்தோஷ் குமார்

விழியதிகாரம் - 1




விழியதிகாரம் I

முன் குறிப்பு :

இது கவிதையென்றால்
நான் கவிஞன் அல்ல.
ஏனென்றால்
இதை எழுதியது
என் விரல்கள் அல்ல
அவளின் விழிகள்.

வேண்டுக்கோள் :

என் நிஜகாதலிக்கு.!

இந்த விழியதிகாரம்
உனக்கு சொந்தமல்ல
எனக்கும் சொந்தமல்ல
ஏனென்றால்
இது எனது
சுயநினைவில்
எழுதப்பட்டது அல்ல.!

அவளின்
கருவிழி ஓரத்து
கண்மையில்
முத்தமிட்டு
மையெடுத்து -இக்கவிக்கு
கருக்கொடுத்தது
நான் அல்ல.
என் பேனாவும்
என் கனாவும்
மட்டுமே.

-----------------------------------------
விழியதிகாரம் !
இந்த தலைப்புக்கு
சொந்தக்காரி
ஓர் ஆணவக்காரி
கொஞ்சம் திமிர்பிடித்தவள்
அதிக திறன்படைத்தவள்
அன்பு கோட்டையென்றால்
அவள்தான் எனக்கு மகாராணி
உணர்வு வானமென்றால்
அவள்தான் எனக்கு நிலவொளி.

எங்களுக்குள்
காதல் இல்லை-ஆனாலும்
காதல்போல ஓர் உணர்வு
இல்லாமலும் இல்லை.


இது
சராசரி உணர்வுகளை
மிஞ்சத்துடிக்கும்
ஒரு விசித்திரக் காதல்

ஆம் நாங்கள்
காதலுக்கான மாற்று சொல்லற்று
விக்கி திக்கி தவிக்கிறோம்.

யாரவள்..?
யாரவள்?
எனது இந்த
விழியதிகாரத்தின் நாயகி
கற்பனையில் பிறந்து -என்
உண்மையாக்கப்பட்டவளோ?
உண்மையில் இந்த
மண்ணில் பிறந்து -என்
கற்பனையில் வாழ்பவளோ?

(விழியதிகாரம்-- தொடரும்)

சனி, 19 ஜூலை, 2014

விழியதிகாரம் -

இருவிழி பார்வையில்
எத்தனை எத்தனை
கவிதைகள்..!!
அடடா..!- அவள்
முகத்தாளில் துடிக்கும்
அழகு முட்டைமுழி
விழியழகில்
தினம் தினம்
செத்துவிடத்துடிக்கிறேன்..

அந்த இடது விழியில்
எனை அடகுவைத்து
வலது விழியில்
என்னை தினமும்
மீட்டெடுத்துக் கொள்கிறேன்.

என்
காதல் உணர்வேறிய
பாலைவன மனவெளியில்
ஒரு
காதல் செடியை
நட்டுவிட்டாள்
இந்த
விழியழகி...!
என் வாலிபத் தேசத்தில்
என் கவிக்குவியல்களை
கொள்ளையடிக்க
வந்த
கொள்ளைக்காரி..!

தேகத்தின் மோகத்தில்
முளைத்திருக்கும் சில காதல்.
பார்வையில் தொடங்கி
படுக்கை அறையில்
முடிந்திருக்கும் சில காதல்.
இந்த காதல்
விழியில் தொடங்கி
உணர்வுகளில் பயணித்து
விழியும் விழியும்
முட்டிக் கொஞ்சி
விழிகளின் முழிகளில்
முடிந்து தொடங்கும்
தொடங்கி முடியும்
ஒரு பெயரிடப்படாத காதல்.
என்னை அறிந்த
அவளும்
அவளுக்குள் வாழம்
நானும்
பேசிக்கொள்கிறோம்
காதலையும் தாண்டிய
ஓர் உறவில்...!


இப்படியும் நடக்குமா?
இவ்வுறவை நான்
துளியும் எதிர்பார்க்கவில்லை.
அவளை காதலிக்கமுடியாதே
என்று ஏங்கியதும் இல்லை
அவளை ஏன் காதலித்தேன்
என்று சிந்திக்கவும் மனமில்லை
இப்படியே என்
மனம் அலைபாயட்டும்.
இப்படியே என்
ரசனைகளை அவள்
ரசித்து தின்றுகொல்லட்டும்.

உடல சேரா
ஓர் உறவில்
மனம் என்ன தவறு
செய்திடப் போகிறது.. ?


இந்த உறவில்
காமனின் ஆட்சி
இல்லாமல் இல்லை..
ஆனால்
அந்த காமம்
இந்த உலகம்
சொல்லும்
வெற்று உணர்ச்சிகள்
எதுவும் சற்றும் இல்லை.

காமத்தை பார்க்கும்
பார்வையில் எங்கள்
காதல் வித்தியாசப்படும்.
ஆம்
காமத்தின் வாசனையில்
காமத்தை தீண்டாமல்
காதல் எல்லையில் நின்று
காதலை
புனிதப்படுத்துகிறோம்
அல்லது
புதியதாய் புனிதப்படுத்துகிறோம்
காதல் மீறிய ஓர் உறவை..!


வழக்கமாக அலட்டிக்கொள்ளும்
காதலில் வாழும் சராசரி
காதலர்கள் நாங்கள் அல்ல.!
ஒரு மெய்ஞானத்தை ஆராய்ந்து
இந்த விஞ்ஞானத்தை கைப்பிடித்து
கற்பனைஉலகில்
உலாவிக்கொண்டிருக்கும்
விசித்திர வித்தியாசமானவர்கள்...!
ஆம்!
நாங்கள்
காதலுக்கான மாற்று சொல்லற்று
விக்கி விக்கி தவிக்கிறோம்.
இந்த விக்கல் தவிப்புக்கூட
நான்கு உதடுகள் சந்திப்பின்
ஒரு நிமிட முத்தத்திலோ..
அவள் விழிக்குதிரை
மீதேறிய என்
உதட்டுக்காரனின் விளையாட்டிலோ
நின்றுவிடலாம்...!
நின்று மீண்டும் ஏங்கவிடலாம்...!


என்றாவது
ஒருநாள்
நான்
காணவில்லையென்றால்
என் கவிதைகள்
பதிவாகவில்லையென்றால்

எனை
எங்கும் தேடாதீர்கள்..!

நான்
அவளின்
இருவிழிகளுக்கு
மத்தியில்
செத்துக்கொண்டிருப்பேன்
இல்லையென்றால்
விழியதிகாரம் படைத்து
வாழ்ந்துக்கொண்டிருப்பேன்.
---------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.

மீசை முளைத்த பறவை

அழகான பறவையல்ல அது
ஆனாலும்
அதன் அலகு அழகு
அதன் சிறகு அழகு.
நுண்ணிய கண்கள் இரண்டு
நுணுக்கமான பார்வையும் உண்டு
இரண்டு கால்கள் தான்
மூன்றாவதாய் ஒரு கை..!
எனக்கு வியப்பு ஏனோ ?
இப்பறவை
சிறகை விரித்தால்
விரிகிறது ஒரு விசித்திரப் பேனா..!

கிளி பறவை பேசும்
குயில் பறவை பாடும்
மயில் பறவை ஆடும்
இம்மூன்றும் இப்பறவை செய்யும்.
இப்பறவை எனக்காக
படைக்கப்பட்டது..!

நன்றாக கவனியுங்கள்..!

எனக்காக படைக்கப்பட்டிருப்பது
பாவை அல்ல
பறவை....!

அடடா....
இதோ இதோ
இப்போதுதான் கவனித்தேன்
பறவை அலகு ஏன் அழகு?
தெரியுமா? அதன்
அலகு மேல் ஒரு மீசை...!
நிச்சயம் பாரதியின் மீசையேதான்..!
சந்தேகமில்லை
கவனித்துவிட்டேன்...
துடிக்கிறது..எனை
தூண்டுகிறது
எதையோ எழுதிட ...!

என்ன எழுதிடவேண்டும்.
யோசித்தேன்.
காதல் கவிதை....!

என்னருகில் வந்த
என் பறவை
மூவிரலில் ஒருவிரலை
கொத்தியது.

“காதலித்தவன் எவனும் எழுதிட முடியும்
நீ சிந்தனையை மாற்று “

இந்த மானிடர்களுக்கு
தத்துவத்தை கவித்துவமாக
எழுதி அசத்தலாம்.
யோசித்தேன் - மீண்டும்
என் மூவிரலில்
அடுத்த விரலை
பலமாக கொத்தியது.

“ கண்ணதாசன் எழுதிவிட்டார்
நீ உன்னை நீருபித்துக்காட்டு “

இருவிரல் காயம்பட்டுவிட்டது
ஒருவிரல் மிச்சம் இருக்கிறது
எப்படி எழுதிட முடியும்..?

”ஏய் பறவையே.....!
நான் எழுத்தாளன்
அவதாரம் எடுத்தவன்.
எதையும் எழுதும்
வல்லமை படைத்தவன்.
என்னை ஏன்
இப்படி இம்சிக்கிறாய்..?”

பறவை சிறகை விரித்தது.
ஓர் அதிசய எழுதுகோலை
இறகுகளிலிருந்து இறக்கியது.
அலகால் எடுத்து
அழகாக என் சட்டப்பையில் நுழைத்து,
என் தலைமயிரை கொத்தி
தூக்கிச் சென்றது.

”பறவையே.....
என்ன செய்கிறாய்...?!
அய்யோ
எனை விடு
எனை விட்டுவிடு...”

எங்கோ பயணித்தது
இராத்திரி நேரமோ அது..
தெரியவில்லை...

ஓரிடத்தில் எனை கிடத்திவிட்டு

“ அதோ பார்...” என்ற
பறவை சொன்ன
திசை நோக்கினேன்.

ஏதோ நிகழ்வுத்திரை...!
எதுவும் புரியவில்லை

ஆ...!
ஆடைக்கிழிக்கப்பட்ட
நிலையில் ஒரு சிறுமி....!
யாரந்த காமப்பன்றி..?
அய்யகோ.......!
பலாத்காரமா.....!?

”அடே அடே
சிறுமியடா அது......!”

எழுந்து ஓட முயன்றேன்.......!
எழு முடியவில்லை
ஓட முடிய வில்லை.....!

என்னாயிற்று எனக்கு.!?
”பறவையே....!
அந்த சிறுமியை
காப்பாற்ற வேண்டும்...
என்னால் இயங்கமுடியவில்லை
என்ன செய்தாய் என்னை?”

மீண்டும் பலமாக
பாரதி மீசைக்கொண்ட
அதன் அலகால்
என் இதயத்தில் கொத்தியது


உடலைவிட்டு உயிரை
கிழிக்கும் சத்தம்..........!

திடுக்கிட்டேன்
எழுந்தேன்...
என்னருகில் அப்பறவை இல்லை
ஆனாலும்
என் மூவிரலில்
இரு விரல் காயமடைந்திருக்கிறது.
ஒரு விரல் எதற்கோ துடிக்கிறது.
கனவா...இது...?
சோதித்துப்பார்க்க

கன்னத்தை கிள்ள
முகத்தை தடவினேன்...
புதிதாக ஒன்று தட்டுப்பட்டது.
என் மீசையில்
பாரதியின் மீசை.........!


சட்டைப்பையில்...?
ஆம்...
ஆம்...
அந்த பறவை தந்த
விசித்திரப்பேனா....!

அப்படியென்றால்...........!
நான் எழுத வேண்டியது.............!!??


பாரதி மீசையுடன்
புதியதாய் கிடைத்த
பேனாவுடன் எழுத துவங்கினேன்.
முதல் வரி...


=காமவெறிப்பிடித்த
=குடிக்கார நாய்களின்
=ஆண் உறுப்புகளை
=வெட்டி வீழ்த்து !
=என் இந்திய சட்டங்களே....!!


=========================================
குறிப்பு : ” இந்த விசித்திரப்பறவை ” யை எனக்கு கொடுத்த அருமை தங்கை கிருத்திகா தாஸ்-க்கு நன்றிகள்..!
===========================================
இரா.சந்தோஷ் குமார்

இரா-வின் நாளைய விடியல்

சொல்லில் உன்னைஅடிக்கவா? - கவிதை
சொல்லி உன்னை அணைக்கவா?
வில்லால் உனை கொன்றிடவா?- வான
வில்லாய் உனை வென்றிடவா?-கவிதை
விரலால் உனக்கு எழுதிடவா? -எச்சரிக்கை
விரலை உனக்கு காட்டிடவா?

✿ ✿

சின்ன சின்ன மழைத்தூறல்களில்
சிறிய சிறிய மழலைவாசமிருக்கும்.
என்னை என்னை நீ தெரிந்திடும்போது
உன்னில் உன்னில் அன்பு தெளிவுப்பிறக்கும்.

✿ ✿

பெரியோர் சிறியோரானால்
சிறியோர் பெரியோர் ஆகிடுவார்
சிறியோர் பெரியதவறிழைத்தால்
பெரியோர் சிறுமனதிலாவது
பெரியமன்னிப்பு வழங்கிடலாகதோ??

✿ ✿

இன்றைய அந்தியில்
செத்துவிடும் சூரியனை
ஒரேயொரு கவியெழுதி
உதயசூரியனாய் என்னால்
தட்டியெழுப்ப முடியும்.
அக்கவியின் தலைப்பு
”நாளைய விடியல்” என்றிருக்கும்

✿ ✿

சீர்கேடுகளை சீர்ப்படுத்த
”இரா ”பொழுதில் சிந்தனை
உலாவ நான் ஆரம்பித்தால்
நிலாவும் என் கைப்பிடிக்கும்- வெற்றி
விழாவும் விடியலில் அரங்கேறும்.

✿ ✿

எதிரி என்று எவரும் இல்லை-என்
எதிரில் நிற்க துணியாதவருக்கு
எதிரி என்பதும் எதிர்ச்சொல்லே.

✿ ✿

உரசி பார்க்க வாருங்கள்
நீங்கள் எவ்வாறு இருப்பினும்
நான் சந்தனமாக மணப்பேன்.
வாருங்கள் எனை உரசிப்பாருங்கள்.

✿ ✿

கர்வம் பிடித்துவிட்டதோ எனக்கு..?
இல்லை இல்லை ஒருப்போதும் இல்லை.
என்று எப்போதும் சொல்லப்போவதில்லை
ஆம் கர்வம் தான்............!
நான் அப்படித்தான்....................!
தீண்டாத வரை நான் பூவின் சந்தோஷம்
தீண்டினால் நான் புயலின் கொடூரம்.


---இரா.சந்தோஷ் குமார்

செவ்வாய், 18 மார்ச், 2014

~~~அலைபேசியில் சீரழியும் இளம் சிறார்கள்~~~



நன்றி : திரு ஹாசிப்கான்(ஒவியம்)
-------------------ஆனந்த விகடன்




அரும்புகளின் கையில்
அலைபேசி எந்திரம்.
அலைபேசியால் தினம்
அலைப்பாய்கிறது மனம்.

விலையில்லா நாட்டின் மானம்
விலைப்போகிறது அவமானம்.!

அலைப்பேசி விற்பனை மையங்களில்
அலைமோதுகிறது மாணவ செல்வங்கள்.!
அற்பகாசுக்கு பதிவேற்றப்படுகிறது ஆபாசங்கள் !

புற்றீசல்களாய் நீலப்படங்கள்
கிளுகிளுப்பாய் நிழற்படங்கள்-அத்தனையும்
பாலுணர்வுக்கு முதலீடுகள்.

உடலுறவு காட்சிகள் யாவும்
அலைபேசியில் உலாவும் கேளிக்கை
பள்ளியறை காட்சி நினைவுகளால்
பாடசாலைகளில் முதலிரவு ஒத்திகை.

இளம் சிறார்களின் பார்வைகளில்
இழையோடுகிறது காமக்கோணம்.
இளங்கன்றுகளின் மூளைகளில்
உள்நுழைகிறது காமசூத்திரம்.

விடலைகளின் மோகம்
முலைகளை படமாக்குகிறது.

பிறப்புறுப்பினை படமெடுத்து-
இணையதள வீதியில்
அம்பலப்படுத்தி ரசிக்கிறது.

உடன்படிக்கும் தோழியர்களுடன்
உடன் படுக்க வேண்டுகிறது
உடன்படவில்லை என்றால்
வன்கொடுமையை தூண்டுகிறது

அய்யகோ....!
நாளைய மன்னர்களாம் இவர்கள்-
இன்றைய காமக்காட்டேரி கொடூரர்கள் !

ஏய் ........!
குற்றவாளிகளை உருவாக்கும் பெற்றோர்களே!
குற்றம்செய்து விட்டீர்களே....! நற்பழக்கதில்
வளர வேண்டிய செல்லங்களுக்கு
செல்பேசியை கையில் கொடுத்தீர்களே..!

செல்பேசியால் செல்லப்பிள்ளைகள்
செல்லரித்த பிஞ்சுகளாய் அழுகுகிறதே..!
கொஞ்சிக்கேட்டால் நஞ்சுகளை கொடுப்பீரோ?
மிஞ்சிடும் பாலுணர்விற்கு காரணமாவீரோ..?

எழுதுகோல் ஏந்தும் பிள்ளைகளுக்கு
கொடுங்கோல் செல்பேசி எதற்கு?-கல்வி
மதிப்பெண்களையும் தாண்டிய வாழ்க்கை
மதிப்பீடு நடத்தைகள் வேண்டாமோ ?

வன்கொடுமைக்கான முதல் குற்றவாளிகளே..!
கலாச்சாரத்தை சீரழிக்கும் காரணிகளே..!
பணதிமிர் பிடித்த பெற்றோர்களே..!-பிள்ளைகளை
வெறும் காமத்திற்குதான் பெற்று விட்டீர்களோ ?
உங்கள் பேர் சொல்ல திரிகிறதோ வாரிசுகள் ?


இனியேனும் திருந்திட பாருங்கள்!
இல்லையேல்...
புதைகுழியில் வீழ்ந்து செத்துமடியுங்கள்..!



................................................இரா.சந்தோஷ் குமார்.

இந்த கவிதை இல்லையென்றால் ....




இந்த கவிதை
என்று ஒன்று
இல்லாவிட்டால்
என்னவாகியிருப்பேன்
நான் ?

இருபத்தியொன்றாம் வயதில்
எனக்கான முதல் மரணம்
நிகழ்ந்திருக்கும்...!

இருபத்தியெட்டாவது வயதில்
எனக்கான இரண்டாம் மரணம்
நிகழ்ந்திருக்கும்..!

முப்பத்துமூன்றாவது வயதில்
மூன்றாவது மரணத்தில்
ஜென்ம விமோசனம்
இன்றி அற்ப ஆவியாகிருப்பேன்.

மூன்று முறையும்
கவிதை படித்து
மனதை மாற்றி
தைரியத்தை கொண்டு
உயிரை காப்பாற்றிக்கொண்டேன்

ரசிகனை யாரும்
ரசிப்பதில்லையே...! -ஆனால்
நான் ரசிகன்
எனக்கு நானே ரசித்தேன்.
எனக்குள்ளிருக்கும்
மாபெரும் இரு
மனநல மருத்துவர்களை
மனமுருகி ரசித்தேன்.


ஒருவர் கருப்பு நிறத்தவர்
மற்றொருவர் கருப்பு அணிந்தவர்

பதின்ம வயதில்
வைரமுத்துவை காதலித்தேன்.
அவன் அழகைவிட
நாவின் தாளத்தில்
தமிழ் நடனமாடியதை
மனதில் படம்பிடித்தேன்...!

வெறும் ரசிகன்
வெறி ஏறிய ரசிகனாக
கல்லூரி காலத்தில்
கருப்பு கவிஞனின் மீது
மோகம் ஏறிக்கொண்டேன்..!

அப்படியே....!
அவன் மூளைக்குள்
குடியேறி தமிழை
குடித்துவிட துடித்தேன்.

வெள்ளை ஜிப்பாவுக்குள்
நூலாக நுழைந்து -அவன்
நூல்களை நுகர தவித்தேன்.


இவன் என்
ஆசான் ஆனான்
ஆனால் இவனுக்கு
ஆசானாக இருப்பது
யாரு?
புலன் விசாரணையில்
புலப்பட்டது..


கருப்பு கண்ணாடி
வழி பார்வையாலே
மொத்த தமிழையும்
தலைக்கு ஏற்றி
தலைமுடியை இழந்த
முத்தமிழ் அறிஞர்
கலைஞர் தான்
என் ஆசானின்
ஆசான் அறிந்தேன்.

இரு பொண்டாட்டிகாரனின்
திருட்டு புத்தி வந்தது
எனக்கு.........!
நல்ல காதல்
கலைஞர் மீதும்.
கள்ள காதல்
கவிப்பேரரசு மீதும்.

காலப்போக்கில்
அரசியல் சதுரங்கத்தில்
நெஞ்சுக்கு நீதி
வழங்கிய கலைஞரை
நெருஞ்சிமுள் குத்திய
வலியோடு காதலிக்கிறேன்

இன்னும் கூட
இப்போதும் கூட
இருவரையும்
ஒரு தலை காதலாய்...!


இந்த கவிதை
என்று ஒன்று
இல்லாவிட்டால்
என்னவாகியிருப்பேன்
நான்............?


இந்த
முப்பத்தைந்தாவது வயதில்
எனக்கான நான்காவது மரணம்
நிகழந்துகொண்டிருக்கும்.

---------------------------------------------------------------------------- --இரா.சந்தோஷ் குமார்.

கிரகம் எழுதுகிறேன்




எதையோ தேடுகிறது
எந்தன் மனம்.
எந்த உந்துதலோ
ஆழ்மனதின்
ஆழத்திலிருந்து
தூண்டுகிறது..விட்டால்
துள்ளுகிறது.

எதை நான்
சாதிக்க வேண்டும்.
எதை நான்
வெல்ல வேண்டும்.
எதையுமே சொல்லாமல்
எதையோ தேடச்சொல்லி
எதற்கோ உந்துகிறது
எந்தன் கிறுக்குமனம்..!

வேரோடு ஆலமரத்தை
சுண்டுவிரலால் சுமக்கமுடியுமோ?
வானவில்லோடு வானத்தை
நுனிபற்களால் பறிக்கமுடியுமோ ?

முடியும் , தேடு
என்று உந்துகிறது
என் அற்புதமனம்!

எப்படி முடியும்?
கேட்பது என் பகுத்தறிவு...!
ஏன் முடியாது ?
கேட்டது என் ஆழ்மனம்...!

”எழுதுகோல் எடு....!
விரலோடு தைத்துவிடு...!
இப்பொழுது...
ஆலமரத்தின் விதைக்குள்
ஊடுருவி ஒளிந்துக்கொள்..!
வானவில்லின் வாசலில்
எழுந்து காட்சியாகு..!
சென்ற விதையிலிருந்து
எழுந்து வந்த வானம்வரை
அனுபவித்து எழுது...!”
புதுமை பித்தமனம்
புதுசா உளறியது.

இது என்ன
மாயா ஜாலமா??
முரண்பட்டு
தலையில் அடித்துக்கொண்டது
என் பகுத்தறிவு...!

பதில் சொன்னது
என் அதிசயமனம்...!

இதுதான்
மாய உலகம்..!
இதுதான்
கற்பனை உலகம்..!
இதுதான்
சிந்தனை எழுச்சி..!
இதில் எழுதுடா
கவிதை...!
நீ தான் டா
கவிஞன்...!
உனக்கு நீதான்
ரசிகன்...!

இந்த உலகை
மறந்து எழுது..!
இந்த உலகத்தையும்
மறக்காமல் எழுது...!
..........
என் நாடி நரம்புகள்
துடிப்புடன்
புத்துணர்ச்சி பெற..
புதிய மின்னல்
மூளையில் சொருகி
நிற்கிறது..!

எழுதி கொண்டிருக்கிறேன்...!
என் கற்பனையில்
கருவாக்கி உருவாக்கி
செதுக்கிகொண்டிருக்கிறேன்.
இதுவரை யாரும்
சிந்திக்காத
இதுவரை யாருக்கும்
புலப்படாத
புதிய கிரகம் ஒன்று.
எனக்கான மாற்று கிரகம் என்று
எழுதிக்கொண்டிக்கிறேன்.



---------------------------------- இரா.சந்தோஷ் குமார்

பிணவாடை



பூனைகள் பிரச்சாரம்
சோதனை கூடத்து எலிகளே
அம்மணமாக நிற்காதீர்

ஊர்வலம் வருது
பிச்சைகாரர்களின் பணப்பெட்டியில்
பாரததாயின் பிணவாடை..!

எவனும் கற்பழிக்கட்டும்
நாட்டுமக்களின் இலவச ஆசையில்
ஜனநாயக மங்கை !


முதலமைச்சர் சந்தோஷ்



எழுதுகோலின் மை தெளித்து
ஆவேச நாயகன் நான்
அரசியல் நாய்களை தாக்கினேன் -அதன்
வாலை வெட்டினார்கள் வாக்காளர்கள்.

எழுத்தாளன் என் எண்ணத்திற்கு
ஏராளமான வரவேற்பு மாலைகள்
”எழுதியது போதும் எழுந்து வா! ”
எதிர்பார்த்த மக்களை ஏமாற்றவில்லை.

ஏப்ரல் முதல் நாளில் - பதவி
மேடை ஏறினேன், உறுதிமொழி எடுத்தேன்
”முதலமைச்சர் சந்தோஷ் வாழ்க”
வேஷமில்லாத வாசகர்களின் கோஷங்கள்.

”முதல்வன் “ திரைப்படம் உசுப்பேற்றியது- என்
பின் தொடரும் பாதுகாப்பு வாகனங்கள் -இனி
பெண்மணிகளை தொடரும் கயவர்களை துரத்தும்.

மதுபான கடைகளில் மது விற்பனைக்கல்ல -அங்கு
இளநீரும், நொங்கும் மானிய விலைக்கு.
இலவச பொருட்கள் ஏதும் இல்லை
உழைத்து வாழ்பவர்களுக்கு சலுகை உண்டு.

கல்வி கற்க கட்டணம் ஏதும் இல்லை
பாடதிட்டத்தில் பாலியியல் கல்வி உண்டு.
மருத்துவமனைகளை அரசு கட்டுப்படுத்தும்
அர்பணிப்புள்ள மருத்துவரை அரசு தத்தெடுக்கும்.

வன்கொடுமை செயலில் ஈடுப்பட்டால்
உடனடியாக பிறப்புறுப்பு துண்டிப்பு..
எச்சில் துப்பினாலும் குப்பை போட்டாலும்
துப்புரவு வேலையோடு அபாரதமும் உண்டு.

விவசாய மேலாண்மை உருவாக்கப்படும்
விவசாயம் அறிந்தவர்களுக்கு அரசு வேலை.
திருநங்கைகள் ஆண்பால் என்று அறிவிக்கப்படும்.
பாலியியல் தொழில் முற்றிலும் ஒழிக்கப்படும்.

........................................
.........................................
”சார் போஸ்ட்......! ”

தபால்காரனின் குரல்
செவியில் கேட்க கண் விழித்தேன்
கனவு கலைந்து எழுந்தேன்
வார இதழ் அனுப்பிய கடிதம் .

கொடுத்தான், படித்தேன்.


--”உங்கள் படைப்பு ஏற்றுக்கொள்ள இயலாது
--அரசியல் அநாகரீகம் நிறைந்துள்ளது ”


பத்திரிக்கை ஜால்ராக்கள்- அரசியல்
பத்தினியை நாசப்படுத்தும் வல்லூறுகள்....!
ஜனநாயகத்தின் வேர்களை
செல்லரிக்கும் ஊடக கிருமிகள்

கனவு நனவாக வேண்டும் -முதலில்
குள்ளநரி கூட்டங்களை விரட்ட வேண்டும்.
இது
நாற்காலிக்கான கனவு அல்ல
நாற்றமெடுக்கும் அரசியலை
நறுமணப்படுத்தும் கனவு.


உங்களில் யார் அடுத்த முதல்வர்...?
முதலில் உங்களில் யார் நல்லவர் ?
விடை சொல்லுங்கள்
புது விடியல் காண்போம்.


----------------------------------------------------------------------------
--இரா.சந்தோஷ் குமார்

செவ்வாய், 7 ஜனவரி, 2014

இவர்களும்.......



ஆண்மையில் பூத்த பெண்மை
பெண்மையில் பூரித்த ஆண்மயில்
ஹார்மோன்கள் சதிசெய்த விதிகள்.
இவர்களும் மனித பிறவிகளே !

பூவையராக விரியாத ஆடவர்கள்.
தாமரையாக மலராத ஆதவன்கள்.
குரோமோசோம்களால் பூக்காத பூக்கள்.
இவர்களும் மனித பிறவிகளே !

சமூகத்தால் அகராதியாக்கப்பட்ட வார்த்தைகள்
குடும்பத்தால் வெறுக்கப்பட்ட உயிர்கள்
உறவுகளால் மறுக்கப்பட்ட அபூர்வங்கள்
இவர்களும் மனித பிறவிகளே..!

மனிதம் இன்னும் சமாதியாகாமல்
புனிதம் மேலும் புனிதப்பட
திருநங்கைகள் எனும் மனிதர்கள்
இவர்களை தோழமையில் பாதுகாப்போம்.

********************************************************

திருநங்கைகளே ! தோழமைகளே !!
கைதட்டியது போதும் ! போதும் !
கை உயர்த்தி கால் பதியுங்கள்
சமுதாயத்தில் நீங்களும் அங்கம்தான்.

வாழ்ந்திட பாலியியல் தொழிலில்
வீழ்ந்திட்ட விதியை மாற்றிடுங்கள்
உயர்ந்திட வீரமென்று புறப்படுங்கள்
உலகத்தில் நீங்களும் சாதிக்கணும்தான்.

பருவ வயது உணர்ச்சி குழப்பத்தில்
உணர்வு எழுச்சியில் நிலை மாறியிருக்கலாம்.
கர்வத்தோடு புத்துணர்ச்சியில் வாழ்ந்திடுங்கள்
தன்மானத்தோடு புரட்சியில் வெல்லுங்கள்.

தடைகள் உடைத்து வாருங்கள்
காத்திட இளைய சமுதாயம் காத்திருக்கிறது.
விடைகள் தானாக வராது -இங்கே
வினாக்களுக்கு காரணம் கிடையாது .

உள்ளுணர்வை அடக்கி வைத்துவிட்டு
வெளியுலகை ரசிக்க ஆயுத்தமாகுங்கள்.
உங்களின் இயலாமையை வீசிவிட்டு
நண்பர்கள் எங்களை அணுகுங்கள்.

தோழமையில் உண்மையும் ஆண்மையும்
போற்றிட உங்கள் நண்பர்கள் தயார்.
அருகாமையில் அமர்ந்து கற்பும் நட்பும்
போற்றிட உங்கள் நண்பர்கள் தயார்.


(தொடரும்........)

சேரிடம் அறிந்து சேர்




சேவல்களே..!
கூவுவதை நிறுத்துங்கள்
ரிங்டோனில் விடிகிறது
எங்கள் உலகம்.

மேகங்களே..!
பொழிவதை நிறுத்துங்கள்
பிளாஸ்டிக்கில் மூடப்படுகிறது
எங்கள் பூமி.

மாடுகளே.!
விவசாயம் செய்யாதீர்கள்.
மாத்திரைகளில் பசியாறுகிறது
எங்கள் வயிறு.

எப்படியாவது மீண்டும்
மனித குலத்தோடு
சிநேகமாக உறவாட
வேண்டுமோ ?
நண்பர் விண்ணப்பம்
அனுப்புங்கள்
முகநூலில் பரிசீலிக்கிறோம்.

காதலிக்கிறேன்



கற்பனைக்கு எட்டியவைகளை
கவி விற்பனைக்கு அனுப்புகிறேன்
ரசனை கொடுத்து வாங்குங்களேன்...

*********************************
தத்தளித்த மனதோடு
காதலிக்க புறப்பட்டேன்
மறுக்க மாட்டாள் -எனை
ஏற்க வருவாள்
என்றே சென்றேன்.

வழியில்
விண்மீன் கேட்டது
அவள் எப்படி என்று

சொன்னேன்
விண்மீனே..! அவள்
விழியில் மீன்
முகத்தில் நிலா
கூந்தலில் கார்மேகம்
இடையில் வானவில்
மொத்தத்தில் வானதேவதை.


என்னை விட பொலிவோ..?
கேட்டது நிலா

.
அவளை விட
நீ சற்று மங்கல்தான்.
என்றேன்.


கருமையிலா மோகம் ?
குறுக்கிட்டு கேட்டது மேகம்

குசும்பாய் சொன்னேன்
கருப்பின் ரசிப்பு- அது
கரும்பின் இனிப்பு
கம்பனிடம் கேட்டுப்பார்.
விடை கொடுத்து
விடைபெற்றேன்

சுற்றிவளைத்த
வானவில் கேட்டது
என்னை விட
வளைவு அதிகமோ?

நெளிந்துகொண்டே சொன்னேன்
உந்தன் வளைவுதான்.
எந்தன் கைப்பட்டால்
வளையல் சத்தம்தான்.

நேரமாயிற்றே
தொடர்ந்தேன் நடந்தேன்
விழுந்தேன்
கீழே கடந்தேன்
கண் விழித்தேன்.

அடடா கனவா இது ??

ஹைக்கூ -கணினி




செவ்வாயில் என் காதலி
தூது போனது மின்காந்த புறா
மின் அஞ்சல்.
```````````````````````````````````
தொலைந்து போனேன்
நொடிகளில் காட்டிக்கொடுத்தது
கூகுள் தேடுதளம்
```````````````````````````````````
எல்லைக்கோடுகள் இல்லை
சர்வதேசமும் நேசிக்கப்படுகிறது
முகநூல்.
```````````````````````````````````
எந்திரமாக என் குழந்தை
தொடைகள் தொட்டில்
மடிக்கணினி.
```````````````````````````````````
அம்பலமாகும் தகவல்
பிரபஞ்சத்தின் திரை
இணைய உலாவி.

http://eluthu.com/kavithai/168423.html

ஆறாம் அறிவின் அறிவுரை



விடைபெற்ற ஆண்டு
விடையென்ன அது கொடுத்தது
விலையென்ன நீ கொடுத்தாய்
சிந்திக்க மறந்துவிட்டு
சிங்காரிக்கின்றாய் புது ஆண்டை..

விடை கொடுத்து
விட்டாய் வருடத்திற்கு
விடை கொடு
என் வினாவிற்கு...

சென்ற ஆண்டு
எது கொடுத்தது ?
எதை கெடுத்தது ?
இந்த ஆண்டில்
எதை விட வேண்டும்?
எது தொடர வேண்டும் ?

சென்ற ஆண்டில்
எது இழந்தாய்?
எதற்கு இழந்தாய்?
இந்த ஆண்டில்
எங்கு எடுப்பாய்?
எதை எடுப்பாய்?


தேதியை கிழித்துவிட்டு
செய்தி என்ன கொடுத்தாய்?
மாதங்களை மாற்றிவிட்டு
மாற்றம் என்ன கண்டாய்?

அனுபவ விருதை
கொடுத்த வருடத்தை
நன்றியில்லாமல் மறந்துவிட்டு
ஆட்டம் ஆடுகின்றாய்.

ஜனவரி..1
இந்த ஒற்றை நாளா
இந்த மொத்த வருடத்தின்
இன்பத்தை கொடுக்கும்?
மெத்த படித்தவன் நீ
மொத்தமாய் மறந்துபோகிறாய்.

இன்றைய புதுசு
நாளைய பழசு
நேற்றைய அனுபவம்
நாளைய சாதனை.

வருடம் கடந்துபோனால்
நாட்காட்டி புதுப்பிக்கப்படுகிறது
நீ என்று புதுப்பிக்கப்படுவாய் ?

உன் விருப்பத்திற்கு
விடையெழுதி விட்டு
வினாவை தேடாதே !
வினாவிற்கு விடைதேடு
விடை கிடைக்கும்
இந்த புத்தாண்டிலாவது ...
புது விடை கிடைக்கும்

உற்சாக மமதையில்
கூத்து அடிக்காதே..!-
உன்னிடமிருந்து
என்னை விடுவித்து
கொள்வேன்.
ஜாக்கிரதை !!

இப்படிக்கு,
ஆறாம் அறிவு