செவ்வாய், 7 ஜனவரி, 2014

காதலிக்கிறேன்



கற்பனைக்கு எட்டியவைகளை
கவி விற்பனைக்கு அனுப்புகிறேன்
ரசனை கொடுத்து வாங்குங்களேன்...

*********************************
தத்தளித்த மனதோடு
காதலிக்க புறப்பட்டேன்
மறுக்க மாட்டாள் -எனை
ஏற்க வருவாள்
என்றே சென்றேன்.

வழியில்
விண்மீன் கேட்டது
அவள் எப்படி என்று

சொன்னேன்
விண்மீனே..! அவள்
விழியில் மீன்
முகத்தில் நிலா
கூந்தலில் கார்மேகம்
இடையில் வானவில்
மொத்தத்தில் வானதேவதை.


என்னை விட பொலிவோ..?
கேட்டது நிலா

.
அவளை விட
நீ சற்று மங்கல்தான்.
என்றேன்.


கருமையிலா மோகம் ?
குறுக்கிட்டு கேட்டது மேகம்

குசும்பாய் சொன்னேன்
கருப்பின் ரசிப்பு- அது
கரும்பின் இனிப்பு
கம்பனிடம் கேட்டுப்பார்.
விடை கொடுத்து
விடைபெற்றேன்

சுற்றிவளைத்த
வானவில் கேட்டது
என்னை விட
வளைவு அதிகமோ?

நெளிந்துகொண்டே சொன்னேன்
உந்தன் வளைவுதான்.
எந்தன் கைப்பட்டால்
வளையல் சத்தம்தான்.

நேரமாயிற்றே
தொடர்ந்தேன் நடந்தேன்
விழுந்தேன்
கீழே கடந்தேன்
கண் விழித்தேன்.

அடடா கனவா இது ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக