செவ்வாய், 7 ஜனவரி, 2014

சேரிடம் அறிந்து சேர்




சேவல்களே..!
கூவுவதை நிறுத்துங்கள்
ரிங்டோனில் விடிகிறது
எங்கள் உலகம்.

மேகங்களே..!
பொழிவதை நிறுத்துங்கள்
பிளாஸ்டிக்கில் மூடப்படுகிறது
எங்கள் பூமி.

மாடுகளே.!
விவசாயம் செய்யாதீர்கள்.
மாத்திரைகளில் பசியாறுகிறது
எங்கள் வயிறு.

எப்படியாவது மீண்டும்
மனித குலத்தோடு
சிநேகமாக உறவாட
வேண்டுமோ ?
நண்பர் விண்ணப்பம்
அனுப்புங்கள்
முகநூலில் பரிசீலிக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக