வெள்ளி, 5 ஜூலை, 2013

சாதித்து என்னப்பயன் ???/

மஞ்சள் வெயில் –என்
நெஞ்சை குதூகலப்படுத்திய
மாலை வேளை .

எந்த கிளியிடமோ பச்சையை
கடன் வாங்கிய வயல்வெளி
என் இருபுறமும் ...

கற்பனை தோள் சாய்ந்து
கவியை எண்ணி நடை
அளந்து கொண்டிருந்த போது.....

என் தொலைதூரத்தில் ஒர்
கலவரத்தீ – காரணம்
காதல் பற்றி கொண்டதால்...

செய்தி என்னவென்றால் ..
இச்சாதி ஆணுக்கும்
அச்சாதி பெண்ணுக்கும்
காதலாம் !!?

கவிஞன் என்று தலை நிமிர்ந்த எனக்கு
மனிதன் என தலை குனிவைவிட
வேறுயென்ன இருக்கு....

சாதிகளை ஒழிக்காமல் நாம்

சாதித்து என்னப்பயன் ???/ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக