மஞ்சள் வெயில் –என்
நெஞ்சை குதூகலப்படுத்திய
மாலை வேளை .
எந்த கிளியிடமோ
பச்சையை
கடன் வாங்கிய
வயல்வெளி
என் இருபுறமும் ...
கற்பனை தோள் சாய்ந்து
கவியை எண்ணி நடை
அளந்து கொண்டிருந்த
போது.....
என் தொலைதூரத்தில்
ஒர்
கலவரத்தீ – காரணம்
காதல் பற்றி கொண்டதால்...
செய்தி என்னவென்றால்
..
இச்சாதி ஆணுக்கும்
அச்சாதி பெண்ணுக்கும்
காதலாம் !!?
கவிஞன் என்று தலை
நிமிர்ந்த எனக்கு
மனிதன் என தலை குனிவைவிட
வேறுயென்ன
இருக்கு....
சாதிகளை ஒழிக்காமல்
நாம்
சாதித்து என்னப்பயன்
???/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக