ஞாயிறு, 28 ஜூலை, 2013

வாலிப கவிஞனுக்கு அஞ்சலி

ஸ்ரீரங்கத்து மைந்தன் -ஏனோ
மரித்து போனான்
விதி செய்த சதி
சதியில் வீழந்த ஒர் கவி

க்வியரசன் கண்ணதாசனுக்கு பிறகு
நீதானே - எங்கள்
கண் கொள்ளா கவிநேசன்.

மறைந்து போனாயோ? - தமிழை
மறந்து போனாயோ ?
இதயம் ஒர் கணம்
மரத்துதான் போனது எனக்கு

எங்கள் இதயம் தொட்ட நாயகன்
உனக்கு நுரையீரல் தொற்று நோய்
ஏன் என நான் அறிவேன் -உன்னுள்
தமிழ் சுவாசம் பொங்கியதால் தானே ?!!

உன்
சிகப்பு முக புத்தக்கத்தில்
வெள்ளை முடி ஒவ்வொன்றும்
கவிதை வரிகள் என்பதாலோ
அதை மட்டும் மழித்து
நீ மட்டும் மரணித்து போனாயோ ??

வாலிப கவிஞனே
வாலியே !! -உன்
வரிகளை சுவைத்த எனக்கு- இந்த
வலிகளையும் சுமக்க பழகிக்கொள்கிறேன் .

உன் ஆதமா சாந்தியடையட்டும்.
உன் கவிகள் சரித்தரம் படைக்கட்டும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக