செவ்வாய், 24 செப்டம்பர், 2013

பிரம்மன் அவன் பிரம்மனே !!


பிரம்மன் அந்த பிரம்மன்
ஆண்பால் என் முன்
பெண்பால் அவளை
படைத்து விட்டானே?

வில்லின் புருவங்கொண்டு
நாணமேற்றி
இமையால் இழுத்து
கயல் விழியால்
எய்தினாள் அம்பை
அந்த ரம்பை

அதுயென் விழிமுழிகளை
தாக்கி மூளையினை
அடக்கி எனை
மூடனாக்கியது –காதல்
பித்தம் ஏறியது
ரத்தம் சூடேறியது –கவி
சந்தம் அரங்கேறியது -இதோயென்
கவி நாட்டியம்….
--------------------------------------

வானவில்லில் நிறமெடுத்து
அந்தி மஞ்சளில் தாளித்து
நிலவில் பொலிவேற்றி
அவள் முகத்தை
படைத்தானோ ? அந்த
பிரம்மன் அவன் கம்பன் !

கார்மேகத்தின் கருமை எடுத்து
கார்குழல் கூந்தலையும்
மின்னலின் மின்சாரம் எடுத்து
காந்த கண்களையும்
படைத்திருப்பானோ ? அந்த
பிரம்மன் அவன் ரசிகன் !

மலர்ந்த சங்குப்பூவை
பறித்து கழுத்தையும்
விரிந்த தாமரைப்பூவை
கவிழ்த்து மார்பையும்
வளைந்த அவரைப்பூவின்
வடிவமெடுத்து இடையையும்
படைத்தானோ ?– அந்த
பிரம்மன் அவன் காமன்!

சந்தேகமென்னவோ? அவனுக்கு -இரண்டு
கேள்விக்குறியை சிலையாக்கி
இடைக்கு கீழ் சொருகி
அன்னத்தின் பாதத்தை உருவாக்கி
அவளின் பின்னே வந்து
ஏன் தான் மயங்கினானோ? –அந்த
பிரம்மன் அவன் பிரம்மனே !


---------------------------- இரா.சந்தோஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக