வியாழன், 5 செப்டம்பர், 2013

வளர்ப்புத்தாய்கள்


முட்டியிட வைத்தாய்
முதுகில் தட்டிக்கொடுத்தாய்
பிரம்பால் அடித்தாய்
பிரம்மிக்க வைத்தாய்
அஞ்ச வைத்தாய்
அசுத்தத்தை துடைத்தாய்
அழ வைத்தாய்
அறிவு கொடுத்தாய்
உச்சந்தலையை வீங்க வைத்தாய்
உச்சத்தை அடைய வைத்தாய்

இவ்வாறே எனை
நீ படைத்தாய்.
கல்விப்பால் அன்பால்
ஊட்டிய ”தாய்” நீ

அ என்றால் அம்மா
ஆ என்றால் ஆசிரியர்
அ , ஆ ……. கற்று தந்த
ஆசிரியர்களே !! எனை
ஆசிர்வதியுங்கள்.

செப்டம்பர் 5 – ஆசிரியர் தினம்

-------------------------------------இரா. சந்தோஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக