அறிவாளியாக
பகுத்தறிவாளனாக
சிந்தனையாளனாக
கவிஞனாக
தொழில்முனைவோனாக -பல
மொழி அறிந்தவனாக
பல்த்துறை வல்லவனாக
பல பாதையில்
வளர்ந்து வருபவன் –இந்த
தற்போதைய ”நான்”
அப்போதைய என்
ஆசிரியர்கள் கொடுத்த
அறிவு முதலீடுகள்
கல்வி சொத்துக்களின்
பரிணாம வளர்ச்சிதான்
சந்தோஷ் குமார் என்கிற நான்.
அகரம் கற்று தந்து- என்னை
சிகரமாய் வளர வைத்த -என்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களே !!
என் நன்றியை
உங்கள் காலடியில்
முத்தமிட்டு சமர்ப்பிக்கிறேன்
ஆசிர்வதியுங்கள் !!
என்னையும்…
என்னை போன்ற பலரையும்…
---------------------------------------இரா. சந்தோஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக