வியாழன், 5 செப்டம்பர், 2013

நம்மை இயக்கும் இயற்பியல்


விதி 1 :
ஒன்றின் மீது விசையில்லாதவரை -அது
ஒய்வு நிலையிலேயே இருக்கும்
உந்தன் மீது சுமையில்லாதவரை – நீ
மனிதன் அல்ல, மண்ணின் பாரம்.

விதி : 2
பொருளின் மீதான விசையினால் - அதன்
வேகம் நேர் விகித திசையிலிருக்கும்
இலட்சியத்தில் நேர்மையடைந்தால்– உந்தன்
வெற்றி மேம்பட்ட திசையிலிருக்கும்

விதி : 3
ஒவ்வொரு வினைக்கும் சமமான
எதிர்வினை உண்டு- மனிதா !
ஒவ்வொரு செயலின் விளைவுக்கும்
பின் விளைவு உண்டு


அஃறிணையான பொருளை ஆராய்ந்த
அறிஞர் நியூட்டனும்
உயர்திணையான மனிதனை ஆராய்ந்த
சுவாமி விவேகானந்தரும்
கண்டறிந்த திணை விதிகள்.
--------------------------இரா.சந்தோஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக