வியாழன், 5 செப்டம்பர், 2013

கவிதையென்னும் என் குழந்தை



சிந்தனை காதலால்
கற்பனை காமத்தால்
மன்மத மனம் கொண்டு
நான் விளையாட………..

மொழியெனும் மனைவி
காம நுகர்ச்சியால் என்னோடு
உறவாடி உருவாக்கினாள்
”கரு “ எனும் மையக்கருத்தை.

இதோ அடுத்த
பத்தாவது நிமிடத்தில்
உயிர் மெய்
எழுத்துகளுடன் பிறக்கப்போகிறது
என் கவிக் குழந்தை !!

இதற்கு முன்
சில குழந்தைகள்
கருவிலே கொலையாகி விட்டது
சில குழந்தைகள்
பிறந்ததும் ஊமையாகி விட்டது.
சில குழந்தைகள்
குறைபிரசவத்தால் பிழையாகி விட்டது
ஆனாலும் நான் உருவாக்கிய
அனைத்து குழந்தைகளும் -என்
அன்பு குழந்தைகள்.
நான் முத்தமிட்ட
அறிவுச் செல்வங்கள்



------------------------------------இரா. சந்தோஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக