ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஈழம்- நம் தொப்புள் கொடி./ ஏன் ? எப்படி?


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாம்
நம் தமிழ் குடியின்
தொப்புள் கொடிதான்
ஈழம்
ஈழத்து மக்கள்.

அவர்கள் வேறு
நாம் வேறு அல்ல
ஒரே வேரில் முளைத்த
மரக்கிளைகள்
மறத்தமிழர்கள்.
ஒரே இனம்
ஒரே மொழி
தமிழன் ! தமிழ் !!

ஈழ மக்கள்
20,000 ஆண்டு
முந்தைய வரலாற்று
சொந்தங்கள்!
நம் தமிழ் பந்தங்கள்!

வரலாற்றிலும் கடலிலும்
மூழ்கி போன
நம் சொத்தான
தமிழ் கண்டமாம்
குமரி கண்டத்து (Lemuria காண்டினென்ட்)
வாரிசுகள் !!

இன்றைய இலங்கை
முற்காலத்தில் சேரன் தீவு !!
ஆம் –நம்
முன்னோர்களை ஆண்ட
தமிழ் மன்னன்
சேரனின் தீவுதான் ??

வரலாற்று பிழையால்
அங்கே தமிழ் ஈழத்தில்
அவர்களும்…
இங்கே தமிழ் நாட்டில்
நாமும் ….

உலகை ஆண்ட தமிழனின்
உறவுகள் சில …..
இன்று .
தமிழகத்தில் அகதி ஆடுகளாக ....
ஈழத்தில் அடிபட்ட புலிகளாக...

இந்த தொப்புள் கொடி
சொந்தங்களை அங்கே
சிங்கள பூனைகள்
சீரழித்த சீரழிக்கின்ற நேரத்தில் –இங்கே
நாம் ……
சொரணையற்ற தமிழர்களாய் ….



ரா.சந்தோஷ் குமார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக