சனி, 3 ஆகஸ்ட், 2013

ஊடல்

பளிர் என
வெளிச்சமிடுவாள்
சுளீர் என
அடிப்பாள் –அவள்
தங்குதடையுள்ள
தமிழ்நாடு மின்சாரமாக....

பொங்கியபடி
பாசத்தை காட்டுவாள்
பொசுக்கென
கோபித்துக் கொள்வாள் –அவள்
பேச்சு வார்தையிலுள்ள
கர்நாடக காவிரியாக....

அரவணைத்தப்படி
அன்பாய் இருப்பாள்
அணையாக
தடை பேசுவாள் – அவள்
விதண்டாவாதம் பேசும்
கேரளத்து முல்லைப்பெரியாரணையாக.

ஊடல்கள் மறைந்து
உறவுகள் மலருவது
எப்போது ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக