சனி, 17 ஆகஸ்ட், 2013

பெண்களின் மெளனம்


பள்ளியில்….
தங்களின் தனயன்
தமிழ் ஆர்வமிக்கவன்
எழத்தாளன் அறிகுறிகள்
தென்படுகிறதே என்று
அன்று என்
தமிழ் ஆசிரியை –என்
தாயிடம் உரைத்தப்போது
கண்களில் நீர் பொங்க
என் அன்னை காட்டிய மெளனத்தின்
பெயர் “பெருமிதம் “
-----------------------------------------
கல்லூரியில்…..
உடன் படித்தவளிடம்
உடனடி காதலால்
உடனே எழுதிய காதல் கவிதையை
உற்றவளிடம் கொடுத்தும்
உற்றும் தொட்டும் பார்க்காமல்
அவள் காட்டிய மெளனத்தின்
பெயர் “ அலட்சியம் “
-----------------------------------------------
கல்லூரியின்
மூன்று ஆண்டுகள்
என் கவி ரசிகையாய்
என் படிப்பு ஆலோசகராய்
என் பாசத்தின் வடிகாலாய்
என் தோள்சாய்ந்திருந்த
என் பெண் தோழியிடம்..
உயிரே ! நீயென் உரிமையே !
உனை விட வேறு யாருமில்லை
உன்னை கை விட மனமில்லையென்று
என் காதலை சொன்னப்போது
கண்கள் சிவக்க
அவள் காட்டிய மெளனத்தின்
பெயர் “ கோபம் “
----------------------------------------------------

சொந்தங்களுக்கு மத்தியில்
சொகுசு மாப்பிளையாக நான்……..
கொலுசு ஒலியில்
கொஞ்சிக்கொண்டு வந்து என்னிடம்
கொஞ்சம் காபியும்
கொஞ்சும் காதல் பார்வையும்
கொடுத்தவளை ….
”என்னம்மா மாப்பிள்ளை பிடிச்சிருக்கா ? ”
என பெரியவர்கள் கேட்டபோது ….
புன்சிரிப்போடு நீடித்த
அவள் மெளனத்தின்
பெயர் “ சம்மதம் “

-----------------------இரா.சந்தோஷ் குமார் ----------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக