ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நண்பேன்டா .....

விழிகளில்
வழிய கண்ணீர்
வேண்டும் .....
தோழமையே உன்
விரலால் துடைக்கப்பட்டு
அக்கண்ணீரும்
இனித்திட வேண்டும்.

தோழமையே உன்
தோள் சாய்ந்து
சோகத்தை
சுகத்தின் புத்தக்கத்தில்
கவிதையாக
எழதிட வேண்டும்.

நண்பா
நான் உனக்கு
சமத்துவ சமுத்திரத்தில்
சிலையொன்று
செதுக்கிறேன்  -அது
வள்ளுவன் சிலையை விட
உயர்ந்து உணர்த்தும்

நீ என்
நண்பேன்டா .... என்று


^^ ரா.சந்தோஷ் குமார் ^^

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக