இன்னும் இன்றும்
என்னை மழலையாய்
பார்க்கும் என் அன்னையின்
பாசம் அழகு
என்னை மேதாவியாய்
நினைத்து நண்பர்களிடம்
அரட்டையடிக்கும் என் தந்தையின்
கர்வம் அழகு
என்னை சாதனையளான்
என்று என்னிடம் சொல்லாமல்
என் அண்ணியிடம்
சொல்லும் என் அண்ணனின்
பெருமிதம் அழகு
என் கொழந்தன்
என் நண்பன் –அவன்
ஒர் கவிஞன் என
உரைக்கும் என் அண்ணியின்
உள்ளக் களிப்பு அழகு
இந்த நால்வரையும்
பெற்ற என் பிறவியும்
ஒர் அழகு .
-------- -ரா.சந்தோஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக