செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

என் உறவின் அழகு



இன்னும் இன்றும்
என்னை மழலையாய்
பார்க்கும் என் அன்னையின்
பாசம் அழகு

என்னை மேதாவியாய்
நினைத்து நண்பர்களிடம்
அரட்டையடிக்கும் என் தந்தையின்
கர்வம் அழகு

என்னை சாதனையளான்
என்று என்னிடம் சொல்லாமல்
என் அண்ணியிடம்
சொல்லும் என் அண்ணனின்
பெருமிதம் அழகு

என் கொழந்தன்
என் நண்பன் –அவன்
ஒர் கவிஞன் என
உரைக்கும் என் அண்ணியின்
உள்ளக் களிப்பு அழகு

இந்த நால்வரையும்
பெற்ற என் பிறவியும்
ஒர் அழகு .

-------- -ரா.சந்தோஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக