ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கனவு மெய்ப்பட வேண்டும் !!!


ஆஹா ! என்ன ஒர் அற்புதம்
புறாக்கள் ! சமாதான புறாக்கள்
மாநிலத்திற்கு மாநிலம்
நாடு விட்டு நாடு
பறந்து கொண்டிருக்க
மறந்து கொண்டிருக்கிறது உலகம்
இன, நிற வேற்றுமைகளை…….

நதிகள் விடுதலை பெற்று விட்டன
தமிழகத்தில் காவேரியின்
ஈரம் பட்டுவிட்டன –
ஈழத்தில் தமிழ் நிம்மதியாய்
சுவாசிக்கின்றன.

ஆஹா என்ன சொல்வேன் ?
எதை சொல்வேன் ?

சட்டமன்றமும்
பாராளுமன்றமும் இப்போது
இளமை மன்றமாக ….
50 சதவீத இட ஒதுக்கீட்டில்
பெண்கள்…
இந்த நாடு – உண்மையில்
இப்போது தாய் நாடாக….


பாரதி கண்ட புதுமைப்பெண்கள்
பாலியல் வன்கொடுமையின்றி
காத்து கொள்ள
அவர்களே உடனடி தீர்ப்பு
வழங்கும் சட்டம்
ஆயுதமாக
அவர்கள் கையில்……

வரதட்சணை என்ற
வார்த்தை தீஞ்சொல் என
அறிவிக்கப்பட்டுவிட்டன.

மதுபான கடைகள் ஆயுர்வேத
மருந்தகமாக
மருவி மகிழ்கிறது.


ஆஹா என்ன சொல்வேன் ?
எதை சொல்வேன் ?
………………………………….
…………………………………..

”டேய் இன்னும் என்னடா தூக்கம் ?
விடிஞ்சிருச்சு பாரு “ – என் அம்மா
விழித்துவிட்டேன் நான் –இன்னும்
விடியவே வில்லை என் சமுதாயத்திற்கு,,,.

------------------------------இரா.சந்தோஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக