ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

மழை நீர்


துளி துளியாய்
பெய்யும் மழை
முகத்தில் மழலையாக
முத்தமிடும் மழை.

அனாதையாக விடப்படுகிறது
சாக்கடையில் -அதனை
அரவணைத்து சேர்த்திடுவோம்
மழைநீர் தொட்டியில்...

அது
பூமித்தாயோடு வளர்ந்து
நன்மையாக
நம்மையும்
நம் தலைமுறையினரையும்
காப்பாற்றிடுமே !

மழை நீர் நம்
உயிர் நீர் !!!

----------------ரா.சந்தோஷ் குமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக