புதன், 14 ஆகஸ்ட், 2013

சுதந்திரத்தை காப்போம்

செங்கோட்டை மேல்
புறாக்கள் காக்கைகள்கூட
சுதந்திரமாய் பறக்க
விமானப்படையின்
தடையுத்தரவு

சுதந்திர தின அணிவகுப்பை
பாதுக்காக்க
தீவரவாத தடுப்பு குழக்கள்.

ஆயுதமில்லாமல் பெற்ற
சுதந்திர தினத்தை காக்க
நாடு எங்கும்
துப்பாக்கி ஏந்திய காக்கிசட்டைகள்..


உற்சாகமாய் காந்தி
போன்ற முதியவரிடம்
வெடிகுண்டு பரிசோதனைகள்

காற்றில் கம்பீரமாய்
பறக்கிறது மூவர்ண கொடி
கொடியை ஏற்றிய
பாரத பிரதமரின்
சுதந்திரதின உரை
கண்ணாடி கூண்டுக்குள் ...

ஆம்
இன்று ஆகஸ்ட் 15
இந்திய சுதந்திர தினம் .


நாடு சுதந்திரம் பெற்றுவிட்ட்து
நாட்டு மக்களின் சுதந்திரம் ........ ?

பெற்ற சுதந்திரம் இன்னும்
வெற்றி பெறவில்லை
முழமையாக. ......

முறையாக மீண்டும்
அகிம்சை வழியில்
போராடுவோம்
தியாகிகள் வாங்கி கொடுத்த
சுதந்திரத்தை காக்க.......

----------------ரா.சந்தோஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக