ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஈழம் -இன்று


மேலே பாரீர் !
படத்தை பாரீர் !!

கிணற்றில் ஊறிக்கொண்டிருக்கும்
ஈழத்து குட்டிப்புலிகள் –வறுமை
பிணியால் வக்கற்றகதியால்
பசிப்போக்க வழியின்றி
வன்னி தாய்கள் தன்
பிஞ்சு பிள்ளைகளை
நஞ்சு கிணற்றில்…………

நெஞ்சு பொறுக்கவில்லையே !!

விம்பி வெடிக்கிறது
என் இதயம்
ததும்பி வழிகிறது
என் கண்ணீர்

அட ச்ச்சே !!
இன்னும் எத்தனை நாள்
இப்படி இப்படி
படித்தும் படைத்தும்
எழுதி அழுவது ??

ஆனாலும்
நானென்ன செய்வேன் ?
தனிமனிதனாய்....

வீரம் இருந்தும்
திறமையில்லாமல்
நானென்ன செய்வேன் ?
.

இங்கு நான்
செல்வத்தில் கொழிக்க
அங்கு என் இனம்
செல்லரித்து புதைந்துவிடுமோ ?– அதில்
புல் முளைத்து
புல்நுனி நீர் ....
காறியுமிழுமோ ?
இனத்தை காப்பாற்றாத
ஈனப்பிறவியே நீ
தமிழன் தானாவென்று ?
என் முகத்தில்
காறியுமிழுமோ ?

----------------------------------- தொடரும்
-----------------------------------என் வேதனைகள்

---------------------------ரா.சந்தோஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக