உடையிலும் நடையிலும்
நாகரீகமான நங்கைகளே !!
உங்களின் ஒவ்வொரு அசைவும்
காட்சிப்பொருளாகதானே
பார்க்கிறது இச்சமுதாயம்.
உடல் அசைந்தாலும்
உடை விலகினாலும்
நீ இன்னும்
காட்சி பொருளாகதானே
காணப்படுகிறாய் !!
இதுதானா பெண் விடுதலை ?
நீ
கல்வியில் முன்னேறி விட்டாய்
அதை கொண்டு
உன்னால் உன்னை
பாலியல் வன்கொடுமையிலிருந்து
காத்து கொண்டாயா ?
நீ
ஆணுக்கு சமம்
ஆனால் ஒரு
ஆணை போல்
விமர்சன்ங்கள் இல்லாத
மறுப்புக்கள் இல்லாத
மறுமணம் செய்ய முடியுமா ?
பெண்ணே நீ
ஆணுக்கு நிகராய்
வாகனம் ஓட்டலாம்
விமானம் ஓட்டலாம் –ஆனால்
விடுதலை பெற்றாயா ?
சலுகை சில கொடுத்து –உனை
சகித்து கொள்கிறது
ஆணாதிக்க சமுதாயம் !!
சலுகைகள் சில கொடுத்து
33 % இட ஒதுக்கீடு தர
சட்டமும் சங்கடப்படுகிறதே ?
புலிகளால் மானுக்கு
விடுதலை கிடைக்காது
ஆண்களால் உனக்கும்
விடுதலை கிடைக்காது.
பசிக்கிற வயிறுக்கு
நம் கைதான்
உணவு ஊட்ட வேண்டும்
தவிக்கிற உன் பெண்ணியத்திற்கு
உன் புரட்சி சிந்தனைதான்
விடுதலை பெற்று தரவேண்டும் .
-----------------------------இரா.சந்தோஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக